SELANGOR

அனைத்து இனத்தவரும் எல்லா பெருநாளையும் கொண்டாட உரிமையுண்டு!

20 ஜனவரி 2020, 3:25 AM
அனைத்து இனத்தவரும் எல்லா பெருநாளையும் கொண்டாட உரிமையுண்டு!

காஜாங், ஜன.20-

நாட்டில் உள்ள அனைத்து இனத்தவர்களும் சமயத்தினர்களும் தங்கள் கொண்டாட்டங்களைக் கொண்டாடும் உரிமையைக் கொண்டுள்ளனர் என்று அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் டாக்டர் ஒங் கியான் மின் தெரிவித்தார்.  இதனிடையே, இனங்களுக்கு மத்தியிலான ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் சில பொறுப்பற்ற தரப்புகள் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியிருப்பது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“மக்கள் மத்தியல் ஐக்கியத்தை வலுப்படுத்த இது போன்ற பெருநாள் கொண்டாட்டங்கள் உதவுவதை மத்திய அரசாங்கம் எப்போதும் ஊக்குவிக்கும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்” என்று இங்குள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில பொங்கல் கொண்டு ஆற்றிய உரையில் அவர் தெரிவித்தார்.

அதே வேளையில், பல்வேறு இனங்களின் நிகழ்ச்சிகளை டத்தோஸ்ர் அமிருடின் ஷாரி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன்னெடுப்பதை அவர் வரவேற்றார்.

மாநில அரசு தொடர்ந்து இது போன்ற பயனான நிகழ்ச்சிகளை மேற்கொண்டு மலேசியாவில் வாழும் அனைத்து இனங்களும் நன்மையடைய வழி வகுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.