SELANGOR

சிலாங்கூர் பூர்வீக குடிமக்கள் விவகார நிரந்தர குழு தலைவராக லோய் சியான் நியமனம்!

16 டிசம்பர் 2019, 4:27 AM
சிலாங்கூர் பூர்வீக குடிமக்கள் விவகார நிரந்தர குழு தலைவராக லோய் சியான் நியமனம்!

ஷா ஆலாம், டிச. 16-

வரும் 2020 ஆம் ஆண்டு தொடங்கி பூர்வீக குடிமக்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிலாங்கூர் பூர்வீக குடிமக்கள் விவகார நிரந்தர குழு தலைவராக மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான ஹீ லோய் சியான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் நடைபெற்ற மாநில அரசாங்க ஆட்சிக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதைத் தொடர்ந்து லோய் சியான் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

"மாநில பூர்வீக சமூகத்தினர் மீது கவனம் செலுத்தப்படுவதோடு உரிய ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற சிலாங்கூர் சுல்தானின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இக்குழுவை நாங்கள் அமைத்தோம்" என்றார் மந்திரி பெசார்.

"இதற்கு முன்பு நிரந்தர குழு எதுவும் இல்லை என்பதால் எலிசபெத் வோங் தலைமையிலான குழு மட்டுமே செயல்பட்டது. இத்தகைய நிரந்தர செயற்குழு வாயிலாக பூர்வீக சமூகத்தினரின் சமூக நலன் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் உள்பட பல்வேறு விவகாரங்கள் மீது கவனம் செலுத்தலாம்" என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.