SELANGOR

இ-பில் கட்டண முறையில் பதிவு செய்யுங்கள்- ஆயர் சிலாங்கூர்

16 டிசம்பர் 2019, 2:26 AM
இ-பில் கட்டண முறையில் பதிவு செய்யுங்கள்- ஆயர் சிலாங்கூர்

ஷா ஆலம், டிச.16-

பயனீட்டாளர்கள் மின்னியல் கட்டண அறிக்கையான இ-பில் முறைக்கு மாறுவதை ஆயர் சிலாங்கூர் நிர்வாகம் ஊக்குவிக்கிறது. இது காகித பயன்பாட்டைக் குறைப்பதோடு எளிமையானதும் விரைவானதும் ஆகும் என்று அது கருதுகிறது. மின் அஞ்சல் வழி அனுப்பப்படும் இ-பில்லுக்கான கட்டணத்தைப் பயனீட்டாளர்கள் எந்நேரத்திலும் எங்கிருந்த போதிலும் இணையம் வழி செலுத்தலாம் என்று அந்நிறுவனத்தின் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ஹாலிஎம் மாட் சோம் கூறினார்.

இந்த இ-பில் கட்டண முறை கடந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே அமலுக்கு வந்துவிட்டத்து என்றும் இதுவரை 4 லட்சம் பயனீட்டாளர்கள் இம்முறையைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

“தற்போது மேலும் 2 லட்சம் பேர் இந்த முறையைத் தேர்வு செய்வர் என்ற இலக்கை கொண்டுள்ளோம். இது நிறைவேறினால் 2020 முதல் காலாண்டில் இந்த கட்டண முறையை சுமார் 6 லட்சம் பயன்படுத்துவர்” என்று சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.