SELANGOR

பிடபள்யூபி திட்டத்தில் 37,612 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்

11 நவம்பர் 2019, 4:31 AM
பிடபள்யூபி திட்டத்தில் 37,612 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்

ஷா ஆலம், நவ.11-

மகளிர் மேம்பாட்டு மையத்தின் (பிடபள்யூபி) தொழில்திறன் மற்றும் செயலாற்றல் தர திட்டத்தின் கீழ் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில் மொத்தம் 37,612 பேர் பதிந்து கொண்டுள்ளனர். அந்த எண்ணிக்கையில், மகளிர் மற்றும் சட்டம் எனும் திட்டத்தில் மொத்தம் 1,694 பேர் பதிந்துக் கொண்டவர்களாவர் என்று சுகாதாரம், சமூகநலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா முகமது கூறினார்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தை பிடபள்யு தரப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றார் அவர். நடப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப இத்திட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்ய தற்போது இந்நிர்வாகம் இந்தத் திட்டங்களை மறு ஆய்வு செய்து வருகிறது என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.