SELANGOR

தண்ணீரில் துர்நாற்றம் : 18 பகுதிகளின் குடிநீர் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானவை

3 அக்டோபர் 2019, 8:44 AM
தண்ணீரில் துர்நாற்றம் : 18 பகுதிகளின் குடிநீர் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானவை

ஷா ஆலம், அக். 3-

தண்ணீர் துநாற்றம் தொடர்பில் 18 வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட 952 புகார்களில் 842 புகார்கள் சமுகமாகத் தீர்க்கப்பட்டு விட்டதாக ஆயர் சிலாங்கூர் தெரிவித்தத்து. அந்த புகார்கள் யாவும் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை பெறப்பட்டவை என்று இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராவோஃப் அகமது கூறினார்.

தண்ணீர் துர்நாற்றம் குறித்து பெறப்பட்ட அனைத்து புகார்களும் விரைவில் தீர்க்கப்படுவதற்கு ஏதுவாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார். சம்பந்தப்பட்ட குளங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் வழி அங்கிருந்து விநியோகிப்படும் குடிநீர் பயன்பாட்டிற்கு பாதுக்காப்பானவை என்றும் மலேசிய சுகாதார தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்பவை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.