SELANGOR

தண்ணீர் துர்நாற்றம்: குடிநீர் விநியோகம் சீரடைந்தது

30 செப்டெம்பர் 2019, 5:23 AM
தண்ணீர் துர்நாற்றம்: குடிநீர் விநியோகம் சீரடைந்தது

ஷா ஆலம், செப்.30-

தூய்மைக்கேட்டின் காரணமாக தண்ணீர் துர்நாற்றம் வீசியதால் சம்பந்தப்பட்ட நான்கு வட்டாரங்களில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தடைப்பட்ட குடிநீர் விநியோகம் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட நீர் சுத்திகரிப்பு குளத்தில் நீரின் மட்டம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றை கண்காணித்த பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆயர் சிலாங்கூர் வாடிக்கையாளத் தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராவோஃப் அகமது கூறினார்.

தண்ணீரின் தரம் குறித்து புகார் செய்தவர்களுக்கு தமது தரப்பு விளக்கமளிக்க விரும்புவதாக அவர் சொன்னார்.

“புகார் அளித்த 120 குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சொதனையில், ஆயர் சிலாங்கூர் விநியோகிக்கும் குடிநீர் மலேசிய சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள தர அளவுக்கு ஏற்ப இருப்பது கண்டறியப்பட்டது” என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.