SELANGOR

லெக்கிமா புயலால் பாதித்தோருக்கு உதவ வெ.1.73 மில்லியன் ஒதுக்கீடு

26 செப்டெம்பர் 2019, 7:36 AM
லெக்கிமா புயலால் பாதித்தோருக்கு உதவ வெ.1.73 மில்லியன் ஒதுக்கீடு

சபாக் பெர்ணம், செப்.30:

லெக்கிமா புயலால் பாதிக்கப்பட்ட சபாக் சட்டமன்ற தொகுதியில் உள்ள சுங்கை ஆயர் தாவார், சுங்கை பஞ்சாங் மற்றும் செகிஞ்சாங் மக்களுக்கு உதவுவதற்காக 1.73 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மந்திரி பெசார் கழகம், கும்புலான் செமெஸ்தா (கேஎஸ்எஸ்பி) மற்றும் சிலாங்கூர் ஸாக்காட் வாரியம் ஆகிய அமைப்புகள் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு பங்களித்துள்ளன. முதல் கட்டமாக சபாக் சட்டமன்றத்தைச் சேர்ந்த 225 பேருக்கு 678,600 வெள்ளி வழங்கப்பட்டதாக மாநில பேரிடர் நிர்வாகப் பிரிவு கூறியது.

இந்த உதவித் தொகையை சபாக் பெர்ணம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமது ஃபாஸியா முகமது ஃபக்கே மற்றும் சபாக் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அகமது முஸ்தாம் ஒஸ்மான் ஆகிய இருவரும் எடுத்து வழங்கினர் என்று அது தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.