SELANGOR

தலைமையேற்று ஓராண்டு நிறைவு: மாநிலத்தை வளப்படுத்த உறுதி பூண்டுள்ளேன்! - மந்திரி பெசார் அமிருடின் ஷாரி

11 ஜூலை 2019, 3:41 AM
தலைமையேற்று ஓராண்டு நிறைவு: மாநிலத்தை வளப்படுத்த உறுதி பூண்டுள்ளேன்! - மந்திரி பெசார் அமிருடின் ஷாரி

ஷா ஆலம், ஜூலை 10-

மக்களை பெடூலி ரக்யாட் திட்டத்தின் மூலம் மேம்படுத்தவும் மாநிலத்தின் வருமானத்தைப் பெருக்கவும் மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாநிலத்தின் அனைத்து நிலையிலான தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“சிலாங்கூரின் 16ஆவது மந்திரி பெசாராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது.பெடூலி ராக்யாட் போன்ற திட்டங்களின் உதவியோடு மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மாநிலத்தின் வருமானத்தையும் மேம்படுத்த உறுதி பூண்டுள்ளேன்” என்று தனது முகநூலில் வெளியிட்ட செய்தியில் அமிருடின் குறிப்பிட்டார்.

அனைத்து மக்களும் முன்னேறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் கருத்துகள் குறிப்பாக பொது மக்கள் வழங்கும் பரிந்துரைகளையும் கருத்துகளையும் தாம் பெரிதும் வரவேற்பதாக அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.