SELANGOR

மலேசியாவில் முதல் முறையாக “விவேக விவசாயம்” சிலாங்கூர் அறிமுகப்படுத்தும்

11 ஜூலை 2019, 3:24 AM
மலேசியாவில் முதல் முறையாக “விவேக விவசாயம்” சிலாங்கூர் அறிமுகப்படுத்தும்

அம்பாங், ஜூலை 10:

நாட்டில் முதல் முறையாக ‘விவேக விவசாய முறையை’ அறிமுகப்படுத்துவதன் மூலம் சிலாங்கூர் மீண்டும் ஒரு வரலாற்றைப் படைக்கவிருக்கிறது. நகர்ப்புற விவசாயத் திட்டத்தின் கீழ் அறிமுகப் படுத்தப்படவிருக்கும் இந்த நவீன நகர்மய விவசாயத் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று அடிப்படை வசதி மற்றும் பொது போக்குவரத்து, நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம் தெரிவித்தார்.

இந்த நவீன விவசாயத் திட்டத்தில் உரம் மற்றும் தண்ணீர் பயனீடுகளைக் கண்காணிக்க கைப்பேசியில் பதிவிறக்கப்படும் செயலி பயன்படுத்தப்படும் என்பது சற்று சுவாரஸ்யமான தகவலாகும் என்றார் அவர்.

இந்த விவேக விவசாயத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக சந்தையில் அதிக விலையில் விற்கப்படும் நீண்ட தர்பூசணி பயிரப்படும் என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.