SELANGOR

தகவலைப் புதுப்பித்தவர்களுக்கு மட்டுமே இனி ‘பெடூலி சேஹாட்’ அட்டைகள்

10 ஜூலை 2019, 9:35 AM
தகவலைப் புதுப்பித்தவர்களுக்கு மட்டுமே இனி ‘பெடூலி சேஹாட்’ அட்டைகள்

ஷா ஆலம், ஜூலை 10:

உண்மையாகவே தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே பெடூலி சேஹாட் அட்டைகள் இனி வழங்கப்படும். இது கடந்த மே மாதம் தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு நடவடிக்கைக்கு ஏற்ப அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நடவடிக்கையானது இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையைக் குறைப்பதற்காக அல்ல. மாறாக, இந்த அட்டைகளைப் பெறுவோர் வாழ்க்கை செலவின உதவித் திட்டத்தில் (பிஎஸ்எச்) பதிவு செய்திருப்பதோடு தங்களின் தகவல்களைப் புதுப்பித்திருக்க வேண்டும் என்பதற்காகவே என்று மந்திரி பெசார் அமிரிடின் ஷாரி கூறினார்.

“மத்திய அரசாங்கத்தின் பந்துவான் சாரா ஹீடுப் திட்டத்தில் பதிவு பெறாதவர்களுக்கு பெடூலி சேஹாட் அட்டைகள் இன்னும் வழங்கப்படவில்லை” என்று அவர் விளக்கமளித்தார். தங்கள் விபரங்களைப் புதுப்பிப்பதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது என்றும் இதற்கான பதிவை மாநில சேவை மையங்களில் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.