SELANGOR

சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது

26 ஜூன் 2019, 11:21 PM
சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது

ஷா ஆலம், ஜூன் 27-

சுத்திகரிக்கப்படாத தண்ணீர் துர்நாற்றம் காரணமாக தற்காலிகமாக தடைபட்ட சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குடிநீர் பங்கீட்டு முறைக்கு தண்ணீரை விநியோகிக்கும் நடவடிக்கை கட்டம் கட்டமாக மீண்டும் தொடங்கின என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராவோஃப் அகமது கூறினார்.

குடிநீர் விநியோகம் மீண்டும் முழு அளவில் செயல்படும் வரையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லோரி மூலம் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கை தொடரும் என்றும் 12 ஓரிட சேவை மையங்களும் செயல்படத் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

“பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்ப அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.