SELANGOR

சிலாங்கூர் பக்காத்தான் திறந்த இல்ல உபசரிப்பு: 10,000க்கும் மேற்பட்டோர் திரள்வர்

24 ஜூன் 2019, 4:07 AM
சிலாங்கூர் பக்காத்தான் திறந்த இல்ல உபசரிப்பு: 10,000க்கும் மேற்பட்டோர் திரள்வர்

ஷா ஆலம், ஜூன் 24-

சிலாங்கூர் பக்காத்தான் கூட்டணி ஏற்பாட்டில் ஜூன் 29ஆம் தேதி பத்து கேவ்ஸ் பொது திடலில் நடைபெறவிருக்கும் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வு காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 1மணி வரை நடைபெறும் என்று மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் போர்ஹான் அமான் ஷா கூறினார்.

உள்ளூர் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதோடு கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தவும் இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சி ஊக்குவிக்கும் என்றார் அவர்.

“வருகையாளர்களை மகிழ்விக்க பல்வேறு உணவு வகைகளை விநியோகிக்கும் பல அங்காடி கடைகள் இங்கு அமைக்கப்படவுள்ளன” என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.