SELANGOR

சிலாங்கூரில் இ- நில நிர்வாகம் - மத்திய அரசு ஆர்வம்

17 மே 2019, 8:40 AM
சிலாங்கூரில் இ- நில நிர்வாகம் - மத்திய அரசு ஆர்வம்

 

ஷா ஆலம், மே 17-

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இ- நில திட்டத்தை சிலாங்கூர் மாநில நிலம் மற்றும் சுரங்கத் துறை அலுவலகம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

இந்த இலக்கவியல் முறை அமலாக்கம் கண்டால் நில நிர்வாக முறை சுயமாக, ஒருங்கிணைந்த, நியாயமாக, வெளிப்படையாக மற்றும் பாதுகாப்பாந முறையில் நடைபெறும் என்று அதன் இயக்குனர் டத்தோ ஜுல்கிப்ளி காலிட் கூறினார்.

மாநிலத்தில் இ- நில திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வுகள் தொடங்கப்படவிருப்பதாக அவர் சொன்னார்.

“இந்தத் திட்டத்தின் மூலம் மாநில நில நிர்வாகத்தின் தரம் உயரும் என நாங்கள் நம்புகிறோம்” என்று மாநில செயலக மண்டபத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்களுடனான நோன்பு நிகழ்ச்சியில் பேசுகையில் டத்தோ ஜுல்கிப்ளி தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.