SELANGOR

உலு சிலாங்கூரில் உயர் தொழில்நுட்ப தொழிற்துறை

15 மே 2019, 4:11 PM
உலு சிலாங்கூரில் உயர் தொழில்நுட்ப தொழிற்துறை

உலு சிலாங்கூர், மே 16-

செரெண்டா உயர் மதிப்பு உற்பத்தி பூங்காவில் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு புதிய தொழில்நுட்ப தொழிற்துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கையை உலு சிலாங்கூர் மாவட்டம் மேற்கொள்ள விருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

571 ஹெக்டர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் வழி மொத்த மேம்பாட்டின் மதிப்பு (ஜிடிவி) 4 முதல் 8 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று உலு சிலாங்கூர் மாவட்ட அதிகாரி மூசா ரம்லி கூறினார்.

“இந்த மேம்பாட்டுத் திட்டமானது 10 முதல் 15 ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மாவட்டத்தின் வட பகுதியில் குறிப்பாக உலு பெர்ணமில் மேற்கொள்ளப்படும். இது தஞ்சோங் மாலிம் கொம்ளெக்ஸ் தரப்பும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகமும் பரிந்துரை செய்த திட்டமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைத் தவிர்த்து, லெம்பா பெரிங்கின் திட்ட நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களில் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடர்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.