SELANGOR

சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டநிறைவு: அடுத்த 24 மணி நேரத்தில் குடிநீர் விநியோகம்

25 ஏப்ரல் 2019, 3:27 AM
சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டநிறைவு: அடுத்த 24 மணி நேரத்தில் குடிநீர் விநியோகம்

ஷா ஆலம், ஏப்.25-

சிலாங்கூர் ஆற்றின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குடிநீர் விநியோக முறையை மேம்படுத்தும் பணிகள் நேற்றிரவு 11 மணிக்கு நிறைவுற்றதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவு தைவர் அப்துல் ராவோஃப் அகமது கூறினார்.

இந்த நிலவரத்தை சிலாங்கூர் குடிநீர் விநியோக நிறுவனத்திடம் (ஷபாஸ்) தெரிவிக்கப்பட்டதாக முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறியது.

“நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படுகிறது, பயனீட்டாளர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு முன்னதாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் முக்கிய குளங்கள் மற்றும் நீர் பங்கீட்டு முறைக்கும் விநியோக்கிப்படும்” என்று அவர் சொன்னார்.

“இந்தப் பணி அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவு பெறும்” என்றார்.

குடிநீர் விநியோகம் பல்வேறு பகுதிகளுக்கு அவற்றின் புவியியல் உயரத்தை பொருத்து கட்டம் கட்டமாக வெவ்வேறு நேரத்தில் தொடங்கும் என்று அவர் விளக்கமளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.