SELANGOR

சட்டவிரோத நெகிழி தொழிற்சாலைகள் ஜூன் மாத இறுதிக்குள் துடைத்தொழிக்கப்படும்

23 ஏப்ரல் 2019, 2:35 AM
சட்டவிரோத நெகிழி தொழிற்சாலைகள்  ஜூன் மாத இறுதிக்குள் துடைத்தொழிக்கப்படும்

ஷா ஆலம், ஏப்.22-

சிலாங்கூரில் வரும் ஜூன் மாதத்திற்குப் பின்னர் சட்டவிரோத நெகிழி தொழிற்சாலைகள் இருக்கக் கூடாது என்ற இலக்கை மாநில அரசு கொண்டிருப்பதாக ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புது கிராம மேம்பாட்டுக்கான ஆட்சி குழு உறுப்பினர் இங் ஸி ஹான் தெரிவித்தார்.

இதுவரை கடுமையான அமலாக்க நடவடிக்கை வழி இதுவரை 48 சட்ட விரோத தொழிற்சாலைகள் மூடப்பட்டதோடு அந்தப் பகுதிகளைத் துப்புரவுபடுத்தும் பணி சமூகமாக நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.

இதனிடையே, ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட 6 இடங்களில் 107 சட்ட விரோத நெகிழி தொழிற்சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இங் கூறினார்.

அந்த எண்ணிக்கையில், கோலசிலாங்கூர், உலு சிலாங்கூர், ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளில் உள்ள 99 தொழிற்சாலைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.