SELANGOR

மந்திரி பெசார் : ஊராட்சி மன்றம் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் உயர்பதவிகளில் மாற்றம்

4 ஏப்ரல் 2019, 8:04 AM
மந்திரி பெசார் : ஊராட்சி மன்றம் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் உயர்பதவிகளில் மாற்றம்

ஷா ஆலம், ஏப்.4-

மக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் ஊராட்சி மன்றம் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் உயர்மட்ட பதவிகளில் மாநில அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டுக்குள் விவேக மாநில அந்தஸ்தை சிலாங்கூர் அடைவதற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் இந்த நியமனங்கள் ஆக்கப்பூர்வ பலனை அளிக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அவற்றுள் ஒன்று, பெட்டாலிங் ஜெயாவின் முன்னாள் மேயர் டத்தோ முகமது அஸிஸி முகமது ஜெயின் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், காஜாங் நகராண்மைக் கழகத்தின் முன்னாள் தலைவர் டத்தோ சாயுத்தி பாக்கார் பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டாராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடப்புக்கு வந்ததாக அவ்வறிக்கை கூறியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.