SELANGOR

காஜாங் நகராண்மைக் கழகத்தின் தலைவராக ரோஸ்லி நியமனம்

3 ஏப்ரல் 2019, 3:47 AM
காஜாங் நகராண்மைக் கழகத்தின்  தலைவராக ரோஸ்லி நியமனம்

காஜாங், ஏப்.3-

முன்னாள் உலு லங்காட் மாவட்ட அதிகாரி டத்தோ ரோஸ்லி ஒஸ்மான், ஏப்ரல் 1ஆம் தேதி காஜாங் நகராண்மைக் கழகத்தின் (எம்பிகேஜே) தலைவராக நியமிக்கப்பட்டார்.

இங்குள்ள மெனாரா எம்பிகேஜேவின் செம்பாகா பூத்தே சந்திப்புக் கூட்ட அறையில், எம்பிகேஜேயின் துணைத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன், அதன் நிர்வாக சேவை இயக்குனர் ஜஹாரி சுக்ரி ஆகியோர் முன்னிலையில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியுவ் கி உட்பட மன்றத்தின் இயக்குனர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மலேசிய புத்ரா பல்கலைக்கழக நில வள நிர்வாகத் துறை இளங்கலை பட்டதாரியான ரோஸ்லி (56 வயது) மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை இளங்கலை பட்டதாரியுமாவார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.