SELANGOR

2008 நிர்வாக மறுமலர்ச்சி : நில உரிமை முறைகேடுகளைத் தவிர்த்துள்ளது

25 மார்ச் 2019, 3:54 AM
2008 நிர்வாக மறுமலர்ச்சி : நில உரிமை முறைகேடுகளைத் தவிர்த்துள்ளது

ஷா ஆலம், மார்ச் 25-

இம்மாநிலத்தில் 2008ஆம் ஆண்டு புதிய நிர்வாகத்தின் கீழ் ஏற்பட்ட நிர்வாக மறுமலர்ச்சியில் நேர்மையற்ற வகையில் நிலம் வழங்கப்படும் வாய்ப்புகள் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டுக்குப் பின்னர், தேசிய நிலச் சட்டத்தின் 76 பிரிவின் கீழ் நில உரிமை வழங்கும் நடவடிக்கையை மாநில ஆட்சிக் குழு மேற்கொண்டு வருவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தொழில்நுட்ப அமைப்புகள் பரிசீலனை செய்த பின்னர் இறுதி முடிவு எடுக்கும் நடவடிக்கையை மாநில ஆட்சிக் குழு மேற்கொண்டு வருகிறது” என்றார் அவர்.

2008ஆம் ஆண்டு வரை நில உரிமை வழங்கும் நடவடிக்கையை மாவட்ட நில செயற்குழு மேற்கொண்டு வந்ததாக அவர் சொன்னார். இன்று நடைபெற்ற சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் மேற்கண்ட விபரங்களை அமிருடின் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.