SELANGOR

எஸ்.பி.எம் 2018: சிலாங்கூரில் 1,510 மாணவர்கள் அனைத்துப் பாடத்திலும் ஏ

14 மார்ச் 2019, 6:41 AM
எஸ்.பி.எம் 2018: சிலாங்கூரில் 1,510 மாணவர்கள் அனைத்துப் பாடத்திலும் ஏ

ஷா ஆலம், மார்ச் 14-

சிலாங்கூரில் எஸ்.பி.எம் தேர்வை எழுதிய மாணவர்களில் மொத்தம் 1,510 பேர் அனைத்து பாடங்களிலும் A+, A மற்றும் A- பெற்றுள்ளனர்.

2017ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 2.22 விழுக்காட்டினர் சிறப்பு தேர்ச்சி பெற்றிருந்த வேளையில் 2018ஆம் ஆண்டு அந்த விகிதம் 2.34 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று சிலாங்கூர் கல்வி துறை இயக்குநர் முகமது காசிம் கூறினார்.

தேர்வு எழுதிய மாணவர்களில் பலர் அனைத்துப் பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி மற்றும் கிரேடிட் பெற்றுள்ளது மாநிலத்தின் மாணவர்களின் தரம் உயர்ந்திருப்பதைக் காட்டுகிறது என்றும் பெருமிதமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

2017ஆம் ஆண்டு எஸ்.பி. எம் தேர்வெழுதிய மாணவர்களில் 57,313 பேர் மட்டுமே சான்றிதழ் பெறத் தகுதி பெற்ற வேளையில், கடந்தாண்டு 54,093 பேர் சான்றிதழைப் பெறும் தகுதியைக் கொண்டுள்ளனர் என்று விபரத்தையும் அவர் வெளியிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.