SELANGOR

திடீர் வெள்ள பிரச்னைக்குத் தீர்வு காண அதிநவீன நீர் குழாய்!

14 மார்ச் 2019, 1:54 AM
திடீர் வெள்ள பிரச்னைக்குத் தீர்வு காண அதிநவீன நீர் குழாய்!

ஷா ஆலம், மார்ச் 14-

கிள்ளான் பள்ளத்தாக்கு சுற்று வட்டாரத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி பெய்த கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் போக்குவரத்து நிலைக்குத்தியது.

கிள்ளான் சுற்றுப் புற வட்டாரத்தில் அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண அதி நவீன நீர் குழாய் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கோத்தா அங்கெரிக் சட்ட மன்ற  உறுப்பினர் நஜ்வான் ஹாலிமியின் பிரதிநிதி அகிஃப் ருஸைனி கூறினார்.

இத்திட்டத்திற்கு தித்தி ஜெயா நிறுவனம், கிள்ளான் நகராண்மைக் கழகம், சிலாங்கூர் குடிநீர் மற்றும் நீர் பாசன இலாகா, தாமான் முத்தியாரா புக்கிட் ராஜா டூவா குடியிருப்பாளர்கள் பிரதிநிதி உட்பட பல்வேறு தரப்பினர் ஒத்துழைப்பு நல்கி வருவதாக அவர் சொன்னார்.

அதேவேளையில், இந்த விவகாரத்திற்கு நீண்ட கால தீர்வு காணும் திட்டம் குறித்து கிள்ளான் நகராண்மைக் கழகத்துடன் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.