SELANGOR

சட்டவிரோத நெகிழி தொழிற்சாலைகளை மூட எம்டிகேஎல் உத்தரவு

1 மார்ச் 2019, 3:47 AM
சட்டவிரோத நெகிழி தொழிற்சாலைகளை மூட எம்டிகேஎல் உத்தரவு

பந்திங், மார்ச் 1-

கோல லங்காட் மாவட்ட மன்றம் அதன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத நெகிழி தொழிற்சாலையின் நடவடிக்கையை வெற்றிகரமாக முடிக்கியுள்ளது.

கோல லங்காட் மாவட்டம் இனி ஒரு போதும் சட்ட விரோத நெகிழி தொழிற்சாலைப் பகுதியாக இருக்காது என்று அதன் தலைவர் முகமது ஜெயின் ஏ. ஹமிட் உறுதியளித்தார்.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்கள் அந்த நிலங்களை மீண்டும் விவசாய நிலங்களாக மாற்றும்படி கோல லங்காட் மாவட்ட நில அலுவலுகம் உத்தரவிட்டுள்ளது என்றார் அவர்.

மொத்தம் 55 தொழிற்சாலைகள் அவற்றின் நடவடிக்கைகளை உடனடியாக முடக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளன என்றும் மேலும் 14 தொழிற்சாலைகள் தங்கள் பகுதிகளில் காணப்படும் குப்பை கூளங்களைத் துப்புரவு செய்யும்படி பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.