SELANGOR

அம்பாங், காஜாங், செமினி மேம்பாட்டு திட்டங்கள் மீது அரசு கவனம்

15 பிப்ரவரி 2019, 7:58 AM
அம்பாங், காஜாங், செமினி  மேம்பாட்டு திட்டங்கள் மீது அரசு கவனம்

பாங்கி, பிப்.16:

உலு லங்காட் வட்டாரம் குறிப்பாக அம்பாங், காஜாங் மற்றும் செமினி ஆகிய பகுதிகளின் மேம்பாட்டு திட்டங்கள் மீது மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது.

மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களும் தாமும் இந்த திட்டத்தின் அமலாக்கத்தை கண்காணித்து வருவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“இந்த வட்டாரம் துரித வளர்ச்சியடைந்து வருவதால், அவற்றின் மேம்பாடு அனைத்து துறையிலும் சம அளவில் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்றார் அவர்.

இந்த வட்டார மக்கள் எதிர்நோக்கும் பொது வசதிகள் உட்பட இதர பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைப்பதும் இதன் வழி உறுதி செய்யப்படும் என்றும் அமிருடின் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.