SELANGOR

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் மாநில அரசு துல்லியமாக ஆராயும்!

10 பிப்ரவரி 2019, 9:14 AM
வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் மாநில அரசு துல்லியமாக ஆராயும்!

அம்பாங் ஜெயா, பிப்.11-

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்னர் மாநில அரசு அதை மிகத் துல்லிதமாக ஆராய்ந்து வருகிறது.

இதில் தொழில்நுட்ப அம்சம் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு சில காலம் ஆகலாம் என்று சுகாதார, சமூகநலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மஹ்முட் கூறினார்.

“வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தில் தேவையான பொருட்களை அனுப்புவது, அவற்றை சேகரிப்பது மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சன்மானம் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதையே தொழில்நுட்ப அம்சம் என்று இங்கு குறிப்பிடப்படுகிறது” என்றார் அவர்.

“மேலும், இந்தத் திட்டத்தில் ஈடுபடுவோரில் பெரும்பாலோர் “சிலாங்கூர் காசே ஈபு விவேக அட்டையை” வைத்துள்ளனர்கள். அவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாது, எனவே நாம்தான் இவற்றைத் தயார் செய்ய வேண்டிய சூழல்” என்று அவர் விளக்கமளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.