SELANGOR

மாநிலத்தின் சுபிட்சத்திற்காக அனைத்து இனங்களின் உரிமை பேணப்படும்

21 ஜனவரி 2019, 1:49 AM
மாநிலத்தின் சுபிட்சத்திற்காக அனைத்து இனங்களின் உரிமை பேணப்படும்

பத்து கேவ்ஸ், ஜன.21:

சிலாங்கூரின் சுபிட்சத்திற்கும் வளப்பத்திற்கும் முதுகெலும்பாக விளங்குவது சமய பேதமின்றி இதர இனத்தவரின் உரிமைகளைப் பேணுவதே ஆகும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தின் சுபிட்சமானது பூர்வ குடியினர் உட்பட மலாய், சீன, இந்தியர்கள் என அனைத்து இனத்தவருக்கும் பொதுவானது என்றார் அவர்.

தான் ஒரு முஸ்லிம் என்றாலும் இனபேதமின்றி அனைத்து சமயத்தவரின் உரிமையைப் பேணுவதாக தாம் உறுதிப் பூண்டுள்ளதாக அவர் சொன்னார்.

எனவே, மாநிலத்தின் வளப்பம் மேலும் செழிக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று சிலாங்கூர் மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இங்குள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் தைப்பூசத் திருவிழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து அமிருடின் பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.