SELANGOR

இ- விளையாட்டைத் தொடர மாநில அரசு உறுதிபூண்டுள்ளது

10 ஜனவரி 2019, 4:14 AM
இ- விளையாட்டைத் தொடர மாநில அரசு உறுதிபூண்டுள்ளது

ஷா ஆலம், ஜன.10:

சிலாங்கூரில் இ- விளையாட்டை தொடர மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக மாநில அரசு ஏற்பாடு செய்த இணைய விளையாட்டிற்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தத் துறை இன்னும் நெடுந்தூரம் செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷா தெரிவித்தார்.

இந்த விளையாட்டுத் துறையை விரிவுபடுத்துவதன் வழி வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதோடு இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களுக்கு சிறந்த பொழுது போக்கையும் ஏற்படுத்தலாம் என்றார் அவர்.

அதேவேளையில், வீடியோ கேம்ஸ் என்றும் அழைக்கப்படும் இந்த விளையாட்டு, நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்யும் ஒரு பயனற்ற செயல் என்ற பெருவாரியான மக்களின் எண்ணமும் மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.