SELANGOR

குடிநீர் கட்டணம் : அனைத்து விவகாரங்களையும் சிலாங்கூர் ஆராயும்

9 ஜனவரி 2019, 7:07 AM
குடிநீர் கட்டணம் : அனைத்து விவகாரங்களையும் சிலாங்கூர் ஆராயும்

ஷா ஆலம், ஜனவரி 9:

நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியது போல் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும் பட்சத்தில், மக்கள் குறிப்பாக பி40 பிரிவினர் எதிர்கொள்ளக் கூடிய பிரச்னைகள் யாவற்றையும் மாநில அரசாங்கம் துல்லிதமாக ஆராயும்.

மத்திய அமைச்சர் கூறியது ஒரு பொதுவான கருத்தாகும் என்று மாநில உட்கட்டமைப்பு, பொது வசதி, விவசாய நவீனமயம் மற்றும் விவசாயத் துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஸாம் ஹஷிம் கூறினார். இந்த விவகாரத்தை மாநில அரசு ஆழமாக ஆராயும் என்றும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டால், அது மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு சுமையாக இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.

குடிநீர் விநியோக சேவை துறையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முயற்சி காரணமாக இவ்வாண்டு குடிநீர் கட்டணம் கட்டம் கட்டமாக உயர்த்தப்படும் என்று நேற்று சேவியர் கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.