SELANGOR

மந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து சுபிட்சமும் அமைதியையும் கொண்டிருக்கும்

11 டிசம்பர் 2018, 9:30 AM
மந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து சுபிட்சமும் அமைதியையும் கொண்டிருக்கும்

கிள்ளான், டிசம்பர் 12 :

சிலாங்கூர் மாநில மக்கள் எப்போதுமே சுபிட்சமான மற்றும் அமைதியும் பாதுகாப்பும் மிக்க சூழலில் வாழ்வதை மாநில அரசாங்கம் தொடர்ந்து நிலைநிறுத்தும் என மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

மாநில மக்கள் மற்றும் மாநிலத்தின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் மிரட்டலாக விளங்கும் எந்த தரப்போடும் மாநில அரசு விட்டுக்கொடுக்கும் அல்லது சகிப்புத் தன்மையை கொண்டிருக்காது எனவும் கூறிய மந்திரி பெசார் இனவாதம் மற்றும் மதவாத பொக்கிற்கும் இம்மாநிலத்தில் இடமில்லை எனவும் அவர் எச்சரித்தார்.

சிலாங்கூர் சுல்தானின் பிறந்தநாளை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்வின் போது இவ்வாறு கூறிய அவர் மக்களின் நலனும்,பாதுகாப்பும் அதேவேளையில் மாநிலத்தின் சுபிட்சமும் அமைதியும் சிலாங்கூர் மாநிலத்தின் முதன்மை கோட்பாடு எனவும் தெளிவுப்படுத்தினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் மாநிலத்தின் பாதுகாப்பு,அமைதி மற்றும் சுபிட்சம் பெரும் பங்காற்றுவதாக கூறிய அவர் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மூலதனமாய் விளங்குவதாகவும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.