SELANGOR

லீ சோங் வேயின் ஆழமான உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது – மந்திரி பெசார்

9 நவம்பர் 2018, 1:40 AM
லீ சோங் வேயின் ஆழமான உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது – மந்திரி பெசார்

ஷா ஆலம்,நவ09:

தேசிய பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வே பூப்பந்து விளையாட்டு மற்றும் அதன் மீது அவர் கொண்டிருக்கும் ஆழமான ஆர்வம் ஆகியவை தன்னை மெய்சிலிர்க்க வைப்பதோடு பெருமிதமாகவும் இருப்பதாக மந்திரி பெசார் அமிரூடின் சஹாரி குறிப்பிட்டார்.

நடப்பில் லீ சோங் வே உடல்நலப் பிரச்னையை எதிர் நோக்கியிருந்தாலும் அவரது ஆர்வம் மற்றும் பூப்பந்து துறை மீது அவர் கொண்டிருக்கும் காதல் ஆழமானது. அவரை நாம் தொடர்ந்து போற்றி மதிப்பதோடு அவர் நலம் பெறவும் பிராதிக்க வேண்டும் என மந்திரி பெசார் தனது டூவிட்டரில் (கீச்சகம்) குறிப்பிட்டுள்ளார்.

அவரது அந்த நம்பிக்கையும் உறுதியான நேசத்தை நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும்.அப்போதுதான் விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை சேர்த்திட முடியும் என்றும் தெரிவித்தார்.லீ சோங் வே நாட்டின் விளையாட்டு துறைக்கு முன்மாதிரி என்றும் புகழாரம் சூட்டினார்.

லீ சோங் வே மூக்கு புற்றுநோய் கண்டிருந்தாலும் அதிலிருந்து தற்போது நலம் பெற்று வரும் அவர் இன்னும் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற தாம் எண்ண வில்லை என கூறியது தொடர்பில் மந்திரி பெசார் இவ்வாறு குறிப்பிட்டார்.

நடப்பில் சிகிச்சை பெற்று வந்தாலும் உடல்நலம் ஒத்துழைத்தால் பயிற்சியில் மீண்டும் களம் இறங்கவுள்ளதாக லீ சோங் வே கூறியிருப்பது இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டல் என்றார்.மாதத்தில் மூன்று முறை சிகிச்சை பெற்று வரும் லீ சோங் வே பூப்பந்து விளையாட்டை தாம் பெரிதும் நேசிப்பதாக புக்கிட் கியாரா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.