SELANGOR

வீடமைப்பு அமைச்சு:837 லெம்பா சுபாங் பிபிஆர் 1 வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

30 ஆகஸ்ட் 2018, 6:31 AM
வீடமைப்பு அமைச்சு:837 லெம்பா சுபாங் பிபிஆர் 1 வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 30:

கிட்டத்தட்ட 837 மக்கள் வீடமைப்பு திட்டத்தில் (பிபிஆர்) உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது என்று அமைச்சர் ஸூரைடா கமாரூடின் கூறினார். இதற்கு மூல காரணம் பிபிஆர் வீடுகளை வெளிநாட்டினருக்கு வாடகை விட்டது ஆகும் என்று ஸூரைடா விவரித்தார்.

" வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சு இதற்கு முன்பு நினைவுறுத்தல் கடிதங்களை அனுப்பி வைத்திருக்கிறது. எதிர் வரும் செப்டம்பர் 30-க்குள் வீட்டு உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம். இதுவரை நான் புளோக் நிர்வாகிகளை நியமித்து மேற்பார்வை செய்யும் பணியை செய்ய சொல்லி இருக்கிறேன். கூடிய விரைவில் எல்லா பிரச்சனைகளும் தீர்க்க முடியும்," என்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.