SELANGOR

மந்திரி பெசார் சுங்கை துவா சட்ட மன்றத்தில் நேரிடையாக களம் இறங்கினார் !!!

22 ஆகஸ்ட் 2018, 9:01 AM
மந்திரி பெசார் சுங்கை துவா சட்ட மன்றத்தில் நேரிடையாக களம் இறங்கினார் !!!
மந்திரி பெசார் சுங்கை துவா சட்ட மன்றத்தில் நேரிடையாக களம் இறங்கினார் !!!

பத்து கேவ்ஸ், ஆகஸ்ட் 22:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி சுங்கை துவா சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர்களை நேரிடையாக சந்தித்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஹாரி ராயா ஹாஜி பெருநாளை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களுடன் களம் இறங்கி சட்ட மன்ற மேம்பாட்டிற்காக உழைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

"  மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறிப்பாக ஊராட்சி மன்றம், நிலம் மற்றும் குடிநீர் வசதிகள் போன்றவை என்னிடம் வைக்கப்பட்டது. பொது மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர் நோக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க நான் முயற்சி செய்கிறேன்," என்று ஹாரி ராயா ஹாஜி பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு  பேசினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.