SELANGOR

அமிரூடின்: தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்த பின்னர், சுங்கை கண்டிஸ் வேட்பாளர் அறிவிக்கப்படும்

4 ஜூலை 2018, 11:05 AM
அமிரூடின்: தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்த பின்னர், சுங்கை கண்டிஸ் வேட்பாளர் அறிவிக்கப்படும்

சா ஆலாம்,ஜூலை04:

சுங்கை கண்டிஸ் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் தொடர்பிலான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னரே அத்தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் சாஹரி தெரிவித்தார்.

நாங்கள் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை என கூறிய மந்திரி பெசார் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்த முடிவினை கட்சியின் மேல்மட்ட பொறுப்பாளர்களே முடிவு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் தலைமைத்துவம் அறிவிக்கும் வேட்பாளரை அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் குறித்த தகவலை அறிவித்த பின்னரே தாம் வேட்பாளர் குறித்து அறிவிப்பேன் என்பதை அவர் மீண்டும் உறுதி செய்தார்.

சுங்கை கண்டிஸ் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி சாஃபி மரணமுற்ற துயரத்திலிருந்து நாங்கள் இன்னும் மீளாமல் இருக்கும் நிலையிலும் அத்தொகுதியின் இடைத்தேர்தலை சந்திக்க தயாராகவே உள்ளோம் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.