SELANGOR

இடைத்தரகர்களை மந்திரி பெசார் நியமிக்கவில்லை!!

29 ஜூன் 2018, 7:34 AM
இடைத்தரகர்களை மந்திரி பெசார் நியமிக்கவில்லை!!

ஷா ஆலாம்,ஜூன்29:

எந்தவொரு விவகாரத்தை கையாளுவதற்கும் அது குறித்த பேச்சுவார்த்தைகளுக்கும் இடைத்தரகர்களாக எந்தவொரு ஏஜென்சியையும் தனிநபரையும் மந்திரி பெசார் நியமிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

தாம் தனது ஏஜெண்டாக யாரையும் நியமிக்கவில்லை என்பதை மந்திரி பெசார் அமிரூடின் ஷஹாரி உறுதிப்படுத்தினார்.

மந்திரி பெசாருடனான சந்திப்பு அல்லது தொடர்பிலான விவகாரங்களை மந்திரி பெசார் அலுவலகத்தின் மூலமும் அல்லது மாநில திட்டமிடல் பிரிவின் செயலகத்தின் மூலமும் தான் உறுதி செய்யப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில்,மந்திரி பெசாரின் பிரதிநிதி என கூறிக்கொள்ளும் இடைத்தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி நினைவுறுத்திய மந்திரி பெசார் மாநில மக்களின் நலனை பாதுகாப்பதும் மாநிலத்தை தொடர்ந்து முன்னேற்றகரமான இலக்கிற்கு கொண்டு செல்வது நடப்பியல் செயல்பாடு என்றும் கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் இம்மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கானது.நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரம்கோர்த்து மாநிலத்தை வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இட்டுச்செல்வோம் என்றார்.

மந்திரி பெசார் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மந்திரி பெசார் இதனை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.