SELANGOR

அரசு ஊழியர்களுக்கு 1மாத சம்பளம் - அஸ்மின் தகவல்!!

4 ஜூன் 2018, 1:45 AM
அரசு ஊழியர்களுக்கு 1மாத சம்பளம் - அஸ்மின் தகவல்!!

ஷா ஆலாம்,ஜூன்04:

சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு நோன்பு பெருநாளை முன்னிட்டு 1 மாத சம்பளத்தை சிறப்பு நிதியாக வழங்கப்படும் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற டேவான் ஜூப்லி பேராக் ஆடிட்டோரியமில் மந்திரி பெசார் இந்த மகிழ்ச்சியான தகவலை அறிவித்தார்.இதன் வழி நோன்பு பெருநாள் சிறப்பு நிதி எவ்வளவு என்பதற்கு விடை கிடைத்தது.ஒருமாதம் சம்பளம் என்பது சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு நிறைவானது என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் சிறப்பு நிதி என்றது அங்கு குமிந்திருந்தவர்கள் கைத்தட்டி அதனை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 17,109 மாநில அரசு ஊழியர்கள் ஒருமாத சம்பளத்தை சிறப்பு நிதியாய் பெறும் அதேவேளையில் மத்திய அரசின் ஏஜென்சி ஊழியர்கள் சுமார் 755 பேர் ஊக்கத்தொகையா வெ.1000ஐயும் பெறுவார்கள் எனவும் கூறிய அஸ்மின் அலி அரசு ஊழியர்கள் தொடர்ந்து மக்களுக்கு நன் சேவையை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.