SELANGOR

அஸ்மின் அலியின் பொருளாதார நிர்வாக ஆளுமை நாட்டிற்கு பயன் அளிக்கும்

27 மே 2018, 6:12 AM
அஸ்மின் அலியின் பொருளாதார நிர்வாக ஆளுமை நாட்டிற்கு பயன் அளிக்கும்

ஷா ஆலம் , மே 27:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, புத்ரா ஜெயாவின் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது. சிலாங்கூர் மாநில முன்னாள் நிதி அதிகாரி டத்தோ நோர்டின் சுலைமான் கருத்துரைக்கயில், அஸ்மின் அலியின் தலைமைத்துவம் சிலாங்கூர் மாநிலத்தில் நிரூபித்துள்ளது, மலேசிய பொருளாதார நலன் அமைச்சராக நியமனம் செய்யப்பட தகுதியானவர் என்று கூறினால் அது மிகையாகாது.

"  மலேசிய நாட்டில் மிக அதிகமாக  உள்நாட்டு உற்பத்தியை கொண்டுள்ள சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசார் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டது சிலாங்கூர் மாநில மக்களுக்கு ஒரு அங்கீகாரம் ஆகும். கடந்த 2014-இல் இருந்து சிலாங்கூர் மாநிலத்தை திறன்மிக்க நிர்வாகத்தினால் சிறந்த அடைவு நிலையைக் கண்ட பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், அஸ்மின் அலியை இப்பதவிக்கு நியமனம் செய்துள்ளார். சிலாங்கூர் மாநில அரசாங்கம் பொறுப்புடனும் , வெளிப்படையாக போக்கு, நேர்மையான மற்றும் தூய்மையான முறையில் செயல்பட்டு வருகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது," என்று சிலாங்கூர் இன்றுக்கு நோர்டின் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.