SELANGOR

பாக்காத்தான் வெற்றி பெற்றால், கீஸ் திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்!!!

7 ஏப்ரல் 2018, 5:25 AM
பாக்காத்தான் வெற்றி பெற்றால், கீஸ் திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்!!!

ஷா ஆலம், புத்ரா ஜெயாவை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் அன்புத் தாய் விவேக சிலாங்கூர் அட்டை (கீஸ்) நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரம், சமூக நலன் , மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு ஆகிய நிரந்தர குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார். 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் வெற்றி பெறும் நிலையில் மலேசியர் அனைவரும் கீஸ் திட்டத்தின் மூலம் பலன் அடையலாம் என்று விவரித்தார்.

"  பிரீம் திட்டத்தை தேசிய முன்னணி அமல்படுத்தி வருகிறது. இதை விட கீஸ் திட்டம் நல்ல பலனை மக்களுக்கு தருகிறது. ஒவ்வொரு மாதமும் கீஸ் பங்கேற்பாளர்களுக்கு ரிம 200 வழங்கப் படுகிறது," என்று டரோயா அல்வி கூறினார் இன்று தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.