SELANGOR

பண்டாமாரான் விளையாட்டு அரங்கின் நீச்சல் குளம் தற்காலிகமாய் திறக்கப்படும்

2 ஏப்ரல் 2018, 2:58 AM
பண்டாமாரான் விளையாட்டு அரங்கின் நீச்சல் குளம் தற்காலிகமாய் திறக்கப்படும்

ஷா ஆலாம், ஏப்ரல் 03:

கிள்ளான் நகராண்மைக் கழகம் பண்டாமாரான் விளையாட்டு அரங்கின் நீச்சல்குளத்தை இவ்வாரம் சனிக்கிழமை தற்காலிமாக திறக்கும் என தெரிய வந்துள்ளது.

சம்மதப்பட்ட நீச்சல் குளத்தை பயன்படுத்த அதிகமான கோரிக்கைகள் வந்த வண்ணம் இருப்பதால் இம்முடிவினை நகராண்மைக் கழகம் எடுத்திருபதாக அதன் தலைவர் டத்தோ முகமாட் யாசிட் பிடின் தெரிவித்தார்.

அந்த நீச்சல் குளத்தை பராமரிக்கும் உரிமத்தை கிள்ளான் நகராண்மைக் கழகம் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்திடம் ஒப்படைத்திருப்பதாகவும் கூறிய அவர் இருப்பினும் இன்னும் சில வரையறைகள் குறித்து கையொப்பமிடவில்லை என்றார்.

இருப்பினும்,பொது மக்களின் கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே அஃது திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

கிள்ளான் நகராண்மைக் கழகம் அதன் ஊழியர்களை அங்கு பணியில் இருக்க செய்யும் என்றும் கூறிய அவர் நீச்சல் குளத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

சிறுப்பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்த நீச்சல் குளத்தை மேம்படுத்துவதற்காக கடந்த 2016இல் தற்காலிகமாக மூடப்பட்டது.இதனை மேம்படுத்துவதற்கு வெ.1 மில்லியனை கிள்ளான் நகராண்மைக் கழகம் ஒதுக்கியதாகவும் தெரிவித்தார்.

இந்த நீச்சல் குளம் அதன் மேம்பாட்டு பணிகளை முடித்தப் பின்னர் அவை முறையாக சிலாங்கூர் விளையாட்டு மன்றத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.