SELANGOR

பத்து கேவ்ஸ் - மாரான் பெருநடை 2018

21 மார்ச் 2018, 12:35 PM
பத்து கேவ்ஸ் - மாரான் பெருநடை 2018

பத்து கேவ்ஸ், மார்ச் 21:

செலாயாங் க.தங்கராஜு தலைமையில் இவ்வருடம் 18ஆம் ஆண்டாக நடைபெறும் இப்பெருநடை வரும் மார்ச் 27ஆம் தொடங்கி மார்ச் 31ஆம் தேதி முடிவடையும். பங்கேற்பாளர்கள் மார்ச் 27ஆம் தேதி பத்துமலை காவல் ஓய்வெடுக்கும் இடத்திற்கு மாலை 7 மணிக்குள் வந்துவிட வேண்டும். அன்றிரவு பத்துமலையில் தங்கும் பெருநடையாளர்களுக்கு பத்து கேவ்ஸ் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமிருடின் ஷாரி இரவு உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல் மறுநாள் 28ஆம் தேதி காலை சிற்றுண்டியும் அவரே வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு க. தங்கராஜு : 016-8782413 / 016-9550404 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

படக்குறிப்பு : சிலாங்கூர் மாநில இந்திய சமூக தலைவர்கள் இணைந்து பத்து கேவ்ஸ் மாறான் பெருநடைக்கு 50 பெட்டி கனிம நீர் வழங்கினார்கள். அவர்களின் சார்பில் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் மாண்புமிகு வி. கணபதிராவ் ஏற்பாட்டாளர்களிடம் வழங்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.