SELANGOR

ஹிஜ்ரா: 3 ஆண்டுகளில் 52,000 வணிகர்கள் பயன் அடைந்துள்ளனர்

19 மார்ச் 2018, 3:09 AM
ஹிஜ்ரா: 3 ஆண்டுகளில் 52,000 வணிகர்கள் பயன் அடைந்துள்ளனர்

ஷா ஆலாம், மார்ச் 21:

கடந்த மூன்று ஆண்டுகளில் ஹிஜ்ரா கடனுதவி திட்டத்தில் வழி 52,000 பங்கேற்பாளர்கள் வியாபார கடன் பெற்று பயன் அடைந்துள்ளனர் என்று சிலாங்கூர் ஹிஜ்ரா வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ டாக்டர் மன்சூர் ஓத்மான் தெரிவித்தார். வறுமை நிலையில் இருந்து மீள இத்திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தி மக்களுக்கு நன்மைகள் கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. சிறு தொழில் முனைவர்கள் ஹிஜ்ரா கடனுதவி திட்டத்தில் வழி வணிகத்தில் மேம்பாடு அடைந்துள்ளனர் என்று விவரித்தார்.

"  நாம் மூன்று ஆண்டுகளில் 56,000 பங்கேற்பாளர்களை இலக்காக கொண்டு செயல் பட்டோம். மேலும் 4,000 பங்கேற்பாளர்கள் இத்திட்டத்தின் மூலம் இணைந்தால் நாம் நமது இலக்கை நிச்சயமாக அடைந்து விடலாம். தற்போது 52,000 வணிகர்கள் ரிம 368 மில்லியன் ஹிஜ்ரா கடனுதவி பெற்றுள்ளனர்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.