SELANGOR

கீஸ்: மக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது; மாநில மக்கள் பெருமிதம்

17 மார்ச் 2018, 1:47 AM
கீஸ்: மக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது; மாநில மக்கள் பெருமிதம்
கீஸ்: மக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது; மாநில மக்கள் பெருமிதம்

காப்பார், மார்ச் 17:

செமந்தா சட்ட மன்றத்தைச் சேர்ந்த 438 தாய்மார்களுக்கு ஸ்மார்ட் சிலாங்கூர் அன்பு தாய் அட்டை (கீஸ்) நேற்று வழங்கப்பட்டது. செமந்தா சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறுகையில் இது இரண்டாவது முறையாக வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

"  இதற்கு முன்பு தோக் மூடா பொது மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 119 தாய்மார்களுக்கு ஸ்மார்ட் சிலாங்கூர் அன்பு தாய் அட்டை வழங்கப்பட்டது. கீஸ் அட்டைகள் கிடைக்கப் பெற்ற தாய்மார்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அட்டையை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்களை குறைக்க முடியும் என்று தாய்மார்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்," என்று தாமான் ஸ்ரீ கெராயோங் பொது மண்டபத்தில் நடைபெற்ற கீஸ் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

#தமிழ் மறவன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.