SELANGOR

டரோயா: தீ விபத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு வாடகை வீடும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் !!!

8 மார்ச் 2018, 1:30 AM
டரோயா: தீ விபத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு  வாடகை வீடும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் !!!
டரோயா: தீ விபத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு  வாடகை வீடும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் !!!

கோலக்கிள்ளான், மார்ச் 7:

தீ விபத்தின் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வாடகை வீடும்,பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் டரோயா அல்விஸ் தெரிவித்தார். தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள் தச்சமயம் அருகில் இருக்கும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் உணவு தண்ணீர் தேவைகளையும் மாநில அரசு ஏற்படுத்தி கொடுத்து வருகின்றது. பாதிக்கப்படவர்களை காண்பதற்காக பண்டார் சுல்தான் சுலைமான் பகுதிக்கு சென்ற டரோயா அவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டதோடு கனிசமான நிதி உதவியையும் வழங்கினார்.

தீ விபத்தின் காரணமாக வீடுகளையும் உடமைகளையும் இழந்தவர்களுக்கு பரிவு மிக்க மாநில அரசின் உதவி மூலம் உணவு மற்றும் அடிப்படை தேவைகளை தச்சமயம் பூர்த்தி செய்து வருகின்றோம் அதேவேளை அவர்களின் வீடுகள் சரி செய்யப்படும் வரை மாநில அரசு அவர்களுகான வாடகை வீட்டினை பார்த்து,தற்காலிகமாக அங்கே தங்க வைக்கப்படும் என்றும் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

மண்டபத்தில் தங்கிருப்பவர்களில் வயதானவர்கள்,பெண்கள்,குழந்தைகள் என்று பல தரப்பினர் இருப்பதால் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று தாம் இங்கு வந்து பார்வையிட்டதாகவும், அனைத்தும் சரியாக இருகின்ற பட்சத்தில் உணவு மற்றும் மற்றும் தேவைப்படும் உதவிகளை உடனடியாக செய்து தரும் படி தன் அதிகாரிகளை பணித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#வேந்தன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.