SELANGOR

146 ரவாங் சட்ட மன்றத்தின் விண்ணப்பதாரர்களுக்கு 'கீஸ்' அட்டை வழங்கப்பட்டது

13 பிப்ரவரி 2018, 8:07 AM
146 ரவாங் சட்ட மன்றத்தின் விண்ணப்பதாரர்களுக்கு 'கீஸ்' அட்டை வழங்கப்பட்டது

ரவாங், பிப்ரவரி 13:

கடந்த பிப்ரவரி 11-இல் ரவாங் சட்ட மன்றத்தின் கீழ் அன்புத் தாய் விவேக சிலாங்கூர் அட்டை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த பொது மக்களுக்கு கீஸ் அட்டைகள் ரவாங் சட்ட மன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. ரவாங் சட்ட மன்ற உறுப்பினர் கான் பெய் நீ கூறுகையில், முதல் கட்டமாக மொத்தம் 146 குடும்பங்களுக்கு இந்த கீஸ் அட்டைகள் வழங்கப்பட்டன என்றார்.

"  கீஸ் அட்டை, இரண்டாம் கட்டமாக சீனப் பெருநாளுக்கு பிறகு வழங்கப்படும். கீஸ் அட்டையை பெற்றுக் கொண்டவர்கள், மாநில அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தனர்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், இன்னும் பொது மக்கள் கீஸ் அட்டைக்கு விண்ணப்பங்கள் செய்த வண்ணம் உள்ளனர் என்றும் இந்த விடயத்தில் மாநில அரசாங்கம் தொடர்ந்து அதிகரிப்பதை பற்றி முடிவெடுக்கும் என்று விவரித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.