SELANGOR

திட்ட அனுமதி இல்லாமல் 9 சிலாங்கூர்கூ வீடமைப்பு திட்டங்கள் ரத்து

7 பிப்ரவரி 2018, 1:23 AM
திட்ட அனுமதி இல்லாமல் 9 சிலாங்கூர்கூ வீடமைப்பு திட்டங்கள் ரத்து

ஷா ஆலம், பிப்ரவரி 7:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒன்பது ஒப்புதல் வழங்கப்பட்ட  சிலாங்கூர்கூ வீடமைப்பு திட்டங்களை ரத்து செய்ததாக சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர நல்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமாட் கூறினார். மேற்கண்ட மேம்பாட்டு நிறுவனங்கள் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றத் தவறிவிட்டனர் என்று தெரிவித்தார். அதிலும் குறிப்பாக, இரண்டு ஆண்டுகளில் மேம்பாட்டு நிறுவனங்கள் திட்ட அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

"  சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு அனுமதி வழங்கிய இரண்டு ஆண்டுகளில் சிலாங்கூர்கூ வீடமைப்பு திட்டம் தொடங்கப் பட வேண்டும். நினைவுக் கடிதம், 14-நாள் நோட்டீஸ், இறுதி நோட்டீஸ் மற்றும் ரத்துக் கடிதம் ஆகியவை கட்டம் கட்டமாக அனுப்பி வைத்திருக்கிறோம்," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

=EZY=

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.