SELANGOR

செப்பாங்கில் பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம் செயலாக்கம்

17 செப்டெம்பர் 2017, 3:35 AM
செப்பாங்கில் பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம் செயலாக்கம்

பண்டார் பாரு சாலாக் திங்கி, செப்டம்பர் 15:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இலவச மருத்துவ சுகாதார அட்டை பதிவு மற்றும் வழங்கும் நிகழ்வு இன்று சிறப்பாக நடந்தேறியது. பண்டார் பாரு சாலாக் திங்கி வட்டாரத்தின் சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர் திரு டைட்டஸ் அவர்களின் ஆதரவோடு சிப்பாங் இந்திய சமூக தலைவர் திரு சிவக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்நிகழ்வை சுங்கை பிலேக் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு லாய் அவர்கள் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து சிலாங்கூர் மாநில மருத்துவ சுகாதார அட்டைகளை எடுத்து வழங்கினார். சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர் திரு.தீபன் அவர்கள் இந்நிகழ்வில் களந்து கொண்டு இந்த அட்டை பயண்படுத்தும் வழிமுறை மற்றும் மேல் விவரங்களை விளக்கினார்.

இன்று மொத்தம் 110 பேர் இந்த அட்டையினைப் பெற்று கொண்டதோடு மட்டும்மள்ளாது மேலும் 100 பேர் பதிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்கள் திரு சிவக்குமார், சிப்பாங் இந்திய சமூக தலைவர் மற்றும் சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர் திரு டைட்டஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி தொகுப்பு: தீபன், செப்பாங் நகராண்மை கழக உறுப்பினர்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.