SELANGOR

மூத்த குடிமக்கள் எஸ்எம்யுஇ திட்டத்தில் பதிந்து கொள்ள வேண்டும்

8 செப்டெம்பர் 2017, 3:25 AM
மூத்த குடிமக்கள் எஸ்எம்யுஇ திட்டத்தில் பதிந்து கொள்ள வேண்டும்

ஷா ஆலம், செப்டம்பர் 8:

சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் மூத்த குடிமக்கள் நல திட்டத்தில் (எஸ்எம்யுஇ) பதிந்து கொண்டு மரண சகாய நிதியான ரிம 2500-ஐ தங்களின் வாரிசுதாரர்களுக்கு கிடைக்க மாநில அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கிறது கோலா குபு பாரு சட்ட மன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார். இத்திட்டத்தில் தகுதி பெற்றவர்கள் பதியவில்லை எனில் இறப்பு ஏற்படும் பொது ரிம 1000 பெறுவதற்கு சிரமம் ஏற்படும்.

"   பதிவு செய்த மூத்த குடிமக்கள் இறந்து விட்டால் சட்ட மன்ற அலுவலகத்தில் வாரிசுதாரர் ரிம 2500-ஐ இரண்டு கட்டமாக பெற்று கொள்ளலாம். முதல் கட்டமாக ரிம 1000 மற்றும் இரண்டாம் கட்டத்தில் ரிம 1500 வழங்கப்படும்," என்று சீனார் ஹாரியான் நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2008-இல் அறிமுகம் செய்த பரிவு மிக்க மக்கள் நல திட்டத்தில் ஒன்றான இத்திட்டம் 2017 மார்ச் 31 வரை ரிம 201 மில்லியன் மரண சகாய நிதியான வாரிசுதாரர்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.