SELANGOR

சிலாங்கூர்-பினாங்கு விவேக நகர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

7 செப்டெம்பர் 2017, 7:06 AM
சிலாங்கூர்-பினாங்கு விவேக நகர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

ஷா ஆலம், செப்டம்பர் 7:

சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநில அரசாங்கங்கள், இரண்டு மாநிலங்களில் உள்ள விவேக நகரங்களை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பிரதிநிதித்து சிலாங்கூர் மாநில அரசாங்க செயலாளர் டத்தோ முகமட் அமீன் அமாட் ஆய்யா மற்றும் பினாங்கு மாநில அரசாங்கத்தின் நிதி அதிகாரி, டத்தோ ஷாருல் பஹியா அபு ஆகியோர் கையெழுத்திட்டனர். செதியா சிட்டி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அமாட் மற்றும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சோவ் கோன் இயோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.