SELANGOR

அகப்பக்கத்தில் ஊராட்சி மன்றங்களை இழிவு படுத்தியது, எம்பிகே காவல்துறையில் புகார்

12 ஆகஸ்ட் 2017, 1:15 AM
அகப்பக்கத்தில் ஊராட்சி மன்றங்களை இழிவு படுத்தியது, எம்பிகே காவல்துறையில் புகார்

கிள்ளான், ஆகஸ்ட் 12:

கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) நேற்று மாலை, எம்பிகேவை இழிவு படுத்தி அகப்பக்கத்தில் பதிவு செய்து உரிமையாளர் மீது காவல்துறையில் புகார் செய்ததாக எம்பிகேவின்  தொடர்பு பிரிவு இயக்குனர் நோர்பீஸா மாஹ்பீஸ் கூறினார். இந்த அகப்பக்கத்தில், வேண்டும் என்றே நகராண்மை கழக பணியாளர்களையும் மற்றும் மாநில அரசாங்கத்தையும் அவதூறாக செய்திகள் பதிவு செய்து இணையத் தளத்தில் பகிர்ந்து கொண்டதாக கூறினார்.

"   தங்களின் பணிகளை நேர்மையான மற்றும் வெளிப்படையாக முறையில் செயலாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தன்மானத்தை தற்காக்க இந்த காவல்துறை புகார் செய்யப்பட்டது. எம்பிகே, காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

சம்பந்தப்பட்ட நபர் தன்னுடைய சொந்த அகப்பக்கத்தில் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தி மாநில அரசாங்கம், அரசாங்க இலாகாக்கள் குறிப்பாக பொதுப்பணித்துறையை கேவலமாக பேசி பதிவு செய்து உள்ளதாக நோர்பீஸா தெரிவித்தார்.

சமூக வலை தளங்களில் சிலாங்கூரின் 12 ஊராட்சி மன்றங்கள் ஐந்து மற்றும் நான்கு நட்சத்திரங்கள் தர அந்தஸ்தை எட்டிய நிலையை கேள்வி எழுப்பி மாசுபடுத்திய செயல் தற்போது தெரியவந்துள்ளது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.