ஷா ஆலம், மே 30:
சிலாங்கூர் மாநிலம் இடம்பெயர்ந்தவர்கள் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளதாகவும் 2011 இருந்து 2016-வரை 19,400 பேர்கள் இடம்பெயர்ந்தவர் அறிக்கையின் வழி தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் பினாங்கு மாநிலம் 12,000 பேர்கள் இடம்பெயர்ந்ததாக அறியப்படுகிறது. செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் கூறுகையில் இந்த சூழ்நிலை உருவாக காரணம் மலேசிய மக்கள் இரண்டு பாக்காத்தான் நிர்வாகத்தில் உள்ள மாநிலங்களின் பொருளாதார நிலைத்தன்மையே ஆகும்.
இதனிடையே சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களின் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் சூழ்நிலை மற்ற மாநிலங்களில் இருந்து அதிகமாக குடிபெயர்ந்து வருகின்றனர் என்று விவரித்தார். 2016-இல் சிலாங்கூரில் 305,300 வேலை வாய்ப்புகள் உயர்ந்து 3,217,600 ஆகியது.
இந்த உயர்வு ஏறக்குறைய 48.3% ஆகவும் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக பதவி ஏற்றது முதல் சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்திருக்கிறது என்று கூறினார்.


