SELANGOR

மக்கள் தொடர்ந்து மாநில அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்

10 மே 2017, 9:56 AM
மக்கள் தொடர்ந்து மாநில அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்
மக்கள் தொடர்ந்து மாநில அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்

பெட்டாலிங் ஜெயா, மே 10:

பொது மக்கள் மாநில அரசாங்கத்தின் திட்டங்களில் மன நிறைவு  அடைவதாகவும் பாக்காத்தான் வழி நடத்தும் சிலாங்கூர் மாநில நிர்வாகம் நேர்மையாகவும் பொறுப்புள்ளவர்களாக தொடர்ந்து செயல்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என்று கூறினார்கள்.

சிலாங்கூர்  இன்று நடத்திய ஆய்வின்படி பொது மக்கள் பாக்காத்தானுக்கு ஆதரவு கொடுத்தனர் என்றும் தொடர்ந்து மாநில அரசாங்கத்தை வழி நடத்த வேண்டும், மேலும் பொது மக்கள் பாக்காத்தான் புத்ரா ஜெயாவை எதிர் வரும் பொதுத் தேர்தலில் கைப்பற்றவேண்டும்  என்று தெரிவித்தனர்.

மஸ்னி மாட் டானி, 44, கூறுகையில் 2008-இல் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பாக்காத்தான் பல மாற்றங்களை மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் அறிமுகம் செய்ததாககூறினார்.

"   சமூக நலன்களை அடிப்படையாகக் கொண்ட புதிய வழிமுறையை பின்பற்றி பொறுப்புள்ள நிர்வாகமாக சேவை ஆற்றும் போது மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். மாநில அரசாங்கம் இந்த நிலையை தொடர்ந்தால் மக்களின் நம்பிக்கையை பெற்று பொதுத் தேர்தலில் வெற்றி பெறலாம்,"என்று கூறினார்.

Screenshot_2017-05-10-17-19-06

 

 

 

 

 

 

 

இதனிடையே, கெ. அம்பரசன் கூறுகையில், சிலாங்கூரில் நேர் மறையான பெருமைமிக்க திட்டங்கள் மக்களின் ஆதரவு பாக்காத்தானுக்கு பெருகும் என்று கூறினார்.  கோத்தா டமன்சாராவில் நடந்த கார்னிவல் ஐபிஆர் தொடக்க விழாவில் மக்கள் ஆதரவு இதைப் புலப்படுத்துவதாக கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.