SELANGOR

ஈஜோக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன

20 ஏப்ரல் 2017, 7:53 AM
ஈஜோக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன

ஷா ஆலம், 20 ஏப்ரல்:

தீடிர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  ஈஜோக், கோலா சிலாங்கூர் மக்கள் மாநில அரசாங்கத்தின் மூலமாக உதவிகள்  அளிக்கப்பட்டு அவர்களின் சுமைகள் குறைக்கப்படும்.

மாநில சுகாதாரம், பொது நல, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி தெரிவிக்கையில், முதலில் பொருளுதவியாகவும் பின்பு பணரீதியாகவும் உதவிகள்  வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதற்கு முன்பாக, டரோயா கம்போங் ஹர்மோனிக்கு சென்று மக்களை சந்தித்துவிட்ட பிறகு வெள்ளத்தை தடுக்கும் மணல் தடுப்பு நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்டார்.

ஏறக்குறைய 16 குடும்பங்கள் 19 ஏப்ரல் அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு துயர்துடைப்பு மையத்தில் மாற்றம் செய்யப்பட்டனர் . இன்று வரை கம்போங் சுங்கை செராய் மற்றும் குண்டாங் சீனப் பள்ளியும் துயர்துடைப்பு மையங்களாக  இருந்து வருகின்றன.

@கெஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.